25 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஸ் ஒயில் போதைப்பொருள் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 6 போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த குறித்த போதைப்பொருள் தலங்கம – பெலவத்தை பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விற்பனைக்கு தயாராக வைக்ப்பட்டிருந்த குறித்த ஹேஸ் ஒயில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.