தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை – ஹம்பாந்தோட்டை பகுதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நிர்மாணப்பணிகள் 85 வீதம் நிறைவடைந்துள்ளன.
நான்கு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் மாத்தறை – ஹம்பாந்தோட்டை வரையான வீதியின் நீளம் 96 கிலோமீற்றராகும். முதற்கட்டமாக மாத்தறையிலிருந்து பெலியத்த வரையிலான வீதி நிர்மாணிக்கப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் பெலியத்தயிலிருந்து வெட்டிய வரையான வீதி நிர்மாணிக்கப்படும்.
மூன்றாம் கட்டமாக வெட்டிய பகுதியிலிருந்து அந்தரவௌ பகுதி வரை நெடுஞ்சாலை அமைக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. திட்டத்தின் இறுதிக்கட்டமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து அந்தரவௌ ஊடாக மத்தள வரையான வீதியை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திட்டத்திற்கென அரசாங்கத்தினால் 242 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.