தேசிய வீடமைப்புக் கொள்கை தயாரிக்கப்படவிருக்கிறது.
அதிகார சபையின் 40ஆவது நிறைவாண்டுக்கு அமைவாக, தேசிய கொள்கை எதிர்வரும் 2ஆம் திகதி வெளியிடப்படவிருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய பலன்சூரிய தெரிவித்தார்.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவிருக்கிறது.
தேசிய வீடமைப்புக் கொள்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்படும் என்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய பலன்சூரிய மேலும் கூறினார்.