உலகில் பாவிகளை மீட்க இறை மகனாக மானிட உருவில் பெத்லகேம் நகரில் மிகவும் எளிமையாக அவதரித்தார் உலகின் மீட்பர் இயேசு கிறிஸ்து. இவரின் பாடுகள் மரணம் உயிர்ப்பு போன்றவற்றை நினைவு கூறும் முகமாக உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள்.
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்கின்ற ஒரு தினம் ஆகும்.
அத்துடன் அந்த வாரத்தில் வரும் ஞாயிறு இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிராக கொடாடப்படுகிறது. அதற்கு முந்தய வெள்ளியே புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி ஆகும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற தினத்தில் கிறித்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் திருப்பலிக்கு நடைபெறும்.