குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களுக்குள்ளான 26 பெண்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். வீட்டு பணிப்பெண்களாக குவைத்தில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த 26 பேரும் மகளிர் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதில் 24 பேர் ஒரு வருட காலத்திற்கும் குறைவான காலம் வீட்டு பணிப்பெண்களாக தொழில் புரிந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் ஊடாக அவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.