உற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் அபிவிருத்தியை எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் காணப்பட்ட கேள்விகளே இதற்கு பிரதான காரணமாகும். புதிய வர்த்தக செயற்பாடுகளின் முன்னேற்றமும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.