தனியார் வைத்தியசாலைகளை நெறிப்படுத்தும் புதிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
27 வகையான மருந்து மாத்திரைகளுக்கான விலை குறைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தனியார் வைத்தியசாலை நெறிப்படுத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே 48 வகையான மருந்துகளுக்கான விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிதாக விலைக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள மருந்து வகைகளில் புற்றுநோய் தடுப்பு மருந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.