மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதிவேக நெடுஞ்சாலை உட்பட நாட்டிலுள்ள சகல முக்கிய வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுமென பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை முதல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதுவரை 536 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை காரணமாக அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து சட்டத்தை மீறிய 19 ஆயிரத்து 774 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.