மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 6.00 மணிக்கு நிறைவடைந்த 24 மணிநேர சுற்றிவளைப்பின்போதே அவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் 10 ஆயிரம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கென விசேட சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 20ம் திகதி வரை சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நடைமுறையிலிருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.