சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தோட்ட அதிகாரியொருவரின் உதவியுடன் பெட்ரோசா கால்வாய் பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வு பணிகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொகவந்தலாவ பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கனை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.