மட்டக்களப்பு மாவட்டத்தைக் அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெறுகிறது.
இன்றைய தினம் மாவட்டத்தின் அனைத்து செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வேலைத்திட்டம் இடம்பெறுகிறது. இதில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு வேலைத்திட்டம், கிராம சக்தி, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா, தேசிய போதைப் பொருள் தடுப்பு போன்ற பல வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுகிறது. மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக ஆயிரத்து 115 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் இறுதிநாள் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.