விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய பாடசாலை மாணவ மாணவியருக்கு வர்ண விருதளித்து கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் விசேட விளையாட்டு ஆலோசகர் சுனில் ஜயவீர தெரிவித்தார். தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சாதனைகளை படைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் வர்ண விருது பெறுவார்கள். இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள்.