வரட்சி காலநிலையின் காரணமாக அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக தேசிய நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நீர் விநியோகத்தை சீரான அழுத்தத்துடன் மேற்கொள்வது சிரமமானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் எதிர்கொள்ள வேண்டிய சிரமங்களுக்கு கவலை தெரிவித்துள்ளதுடன் தற்போதைய நிவைமையில் மிகவும் சிக்கமான முறையில் நீரை பயன்படுத்துமாறும் நீர் பாவனையாளரிடம் சபை கேட்டு கொண்டுள்ளது.