இவ்வருடத்திற்கான புத்தரிசி விழாவை அடுத்த மாதம் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜயசிறி மகாபோதிக்கருகில் நிகழ்வு இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகுமென கமநல அபிவிருத்தி ஆணையாளர் மத்தும பண்டார வீரசேகர தெரிவித்துள்ளார். குறித்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இம்முறை கிடைத்த அறுவடை, காலநிலை போன்றே அடுத்த முறையும் உரிய காலத்தில் போகத்தை மேற்கொள்ள ஆசிவேண்டி பிரார்த்தனைகளும் இடம்பெறுமென கமநல அபிவிருத்தி ஆணையாளர் மத்தும பண்டார வீரசேகர குறிப்பிட்டார்.