விஷமற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறுமென தேசிய பொதுச்சபை தலைவர்,
பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். எதிர்ப்பார்க்கப்பட்டதை விட அதிகளவான உற்பத்தியாளர்கள் தற்போது வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். விஷமற்ற உணவு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதோடு, மாநாடும் இடம்பெறும். எதிர்வரும் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணிக்கு விசேட ஆவண பிரதியொன்றை வெளியிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.