2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான அறிக்கையில் எவ்வித ஆவணத்திலும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனீவா மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளார். சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லையெனவும் ஐநா அலுவலகம் இலங்கையில் தேவையில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐநா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கைமக்கு பதில் அளித்து உரையாற்றும் போதே அமைச்சர் திலக் மாரப்பன ஜெனீவாவில்இதனை தெரிவித்தார். மனித உரிமைகள் தொடர்பான அலுவலகம்ஒன்றை இலங்கையில் ஏற்படுத்த வேண்டிய தேவையில்லையெனவும் அவர் தெரிவித்தார். இலங்கைமக்கு ஊக்குமளிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, எதிரான பிரேரணைகள் சமர்ப்பிக்க கூடாது எனவும் அவர் கூறினார். 2018ம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற அரசியல் தொடர்பான சம்பவங்களினால் தேசிய கட்டமைப்பு பலம் பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார். எமது நீதிமன்றம், அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சுக்களின் சுயாதீன தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையை கண்டறியும் செயல்களை நோக்கும் போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட்டு அது செயற்படுகின்றது. அதற்கான வளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவொன்றை உருவாக்குவதற்கான யாப்பொன்றை அமைச்சரவை தற்போது ஆராய்ந்து வருகின்றது. கொள்கை தொடர்பான விடயங்களை எடுத்துக்கொண்டால் பயங்கரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் காணப்படும் வழக்குகள் ஆராயப்பட்டு, அதனை துரிதப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுகின்றன. வளங்கள் தொடர்பான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கு மூன்று ஆணையாளர்கள் அரசியல் சட்டவாக்க சபையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவு ஒன்றை வழங்கவும் இம்முறை வரவு செலவு திட்டததில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மீண்டும் மோதல் ஒன்று ஏற்படாமல் இருப்பதற்கான பின்புலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த காணிகளில் 75 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது சரியான அளவு அல்லவெனவும் 88.87 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் காணிகளில் 92.16 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மனித புதைக்குழிகள் மேலும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர், மன்னார் மனித புதைக்குழி ஐரோப்பிய காலணித்துவ ஆட்சிக்குரிய கி.பி 1499கும் 1719கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குரியது என அமெரிக்காவிடம் இருந்து பெற்று கொண்ட ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். போரின் போது இலங்கை இராணுவம் அனேகமான நாடுகளில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக செயற்பட்டுள்ளதாகவும் எந்தவொரு இனக்குழுக்களுக்கும் எதிராக இராணுவம் செயற்படவில்லையெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்தார். யுத்த குற்றங்கள் அல்லது, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனிநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனிநபர்களுக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கான மனித உரிமை பேரவையின் விசாரணை அறிக்கையிலோ அல்லது வேறு எந்த ஆவணத்திலோ குறிப்பிடப்படவி;ல்லையென உறுதியாக சுட்டிக்காட்ட முடியும். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இலங்கை பாதுகாப்பு படைகளில் அல்லது, பொலிஸ் துறையில் தற்போது சேவையாற்றும் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உரிய உரிமைகளை வழங்காது இருப்பது அநீதியானது எனவும் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில் இலங்கை சார்பில் பா.உ சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.