மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் என்பவற்றின் சேவைகளை சனிக்கிழமைகளிலும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் ஆலோசனைக்கமைய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் காலங்களில் சனிக்கிழமைகளிலும் வாகன அனுமதிபத்திரம் வழங்கும் சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.