அனலைத்தீவின் வடமேற்கு பகுதியில் கடற்படையினரால் ஒருதொகை புகையிலை மீட்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்படைக்கு சொந்தமான தாக்குதல் படகொன்றினூடாக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது 300 கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட புகையிலை கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த புகையிலை தொகை விட்டுச்சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 6 புகையிலை பொதிகள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.