விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்ற வந்த பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். கடமையின் நிமித்தம் பயணித்த சந்தர்ப்பத்தில் பம்பலப்பிட்டி பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளானது. கடந்த மாதம் 24ம் திகதி சம்பவம் இடம்பெற்றது. டிபென்டர் ரக வாகனமொன்றும் பொலிஸ் அதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியில் விபத்து நேர்ந்தது.