ஈரான் அணுவாயுத ஒப்பந்த சந்திப்பில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஈரானுக்கு இடையிலான வர்த்தகத்தை மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையே தற்போது முன்னெடுக்கப்படுகிறது. கடந்த 2015 ம் ஆண்டு அணுசக்திதயை மட்டுப்படுத்துவது தொடர்பில் மேற்குலக நாடுகளுடனான ஒப்பந்தத்தில் ஈரான் கைச்சாத்திட்டது. குறித்த ஒப்பந்தத்தில் ஆரம்பத்தில் அமெரிக்கா இணைந்திருந்தது. ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகி கொண்டது. இதனையடுத்து இம்முறை அமெரிக்காவின் பங்களிப்பின்றி சந்திப்பு இடம்பெறுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.