இன்றைய தினம் நாட்டின் பல மாகாணங்களில் அதிக உஷ்ணத்துடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எச்சரிக்கையொன்றும் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கூடுதல் வெப்பநிலை நிலவுமென எதிர்பார்ப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் சூரியன் உச்சம்கொடுக்கும் நேரங்களில் அதிக நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதிகளவில் நீர் பருகுவதுடன், சிறுவர்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்து, முதியோர் மற்றும் நோயாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.