சட்டவிரோத யானைக் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இது குறித்து விசாரணை செய்ய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லாத காரணத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு மீதான விசாரணை சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜனாகி ராஜ்த்தன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இடம்பெற்றது.