இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டி இன்னும் சொற்ப வேளையில் செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது.
இப்போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறும்.இலங்கை நேரப்படி பி.ப. 4.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
இன்றைய போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுமென இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.