மாவனெல்லை கீழ் கடுகண்ணாவ அம்பலம பகுதியில் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர். அட்டாளைச்சேனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு 9.15 மணியளவில் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 32 வயதுடைய அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த பஸ்ஸின் நடத்துனரென தெரியவந்துள்ளது.