2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. காலை 9.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது. வறுமையை ஒழித்து மக்களை வலுப்படுத்தும் வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13ம் திகதியிலிருந்து ஏப்ரல் 5ம் திகதி வரை இடம்பெறவுள்ளது