வடகொரியாவுக்கு அரச பிரதிநிதிகளை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையில் இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றது. இருவருக்கும் இடையிலான சந்திப்பு எந்தவித ஒப்பந்தங்களுமின்றி நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் விரைவில் வடகொரியாவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.