மகா சிவராத்திரியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் குறித்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் செயற்பாட்டு அதிகாரி நிஹால் ஹிதெல்லஆராச்சி தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு பஸ் சேவைகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பதுளை, ஹட்டன் பகுதிகளுக்கும் பஸ் சேவைகள் இடம்பெறும். பயணிகளின் தேவைக்கமைய பஸ்கள் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்பமென போக்குவரத்து சபையின் செயற்பாட்டு அதிகாரி நிஹால் ஹிதெல்லஆராச்சி தெரிவித்தார்.