பிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறும் புதிய முதலீட்டு வலயத்தின் ஊடாக இளைஞர் யுவதிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுமன அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதேசத்தின் மக்களுக்கும் புதிய முதலீட்டு வலயத்தின் ஊடாக பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறவுள்ளன. பிரதேசத்தின் அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யும் திட்டமும் இதற்கிணைவாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.