பயணிகள் பஸ் வண்டிகளில் ஒலி ஒளிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன. பஸ் வண்டிகளிகள் ஒளிபரப்பப்படும் வீடியோ காட்சிகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால் விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாராச்சி தெரிவித்தார். அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிபரப்பு செய்தல், மோசமான காட்சிகள் அடங்கிய பாடல்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்தல் தொடர்பில் எழுத்து மற்றும் வாய்மூல முறைப்பாடுகள் கிடைத்தன. இதனால் குறித்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. பஸ் வண்டிகளில் ஒலி, ஒளிபரப்பு செய்ய உகந்த பாடல்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பட்டியலிடப்பட்டுள்ளன. எதிர்வரும் இரு வார காலப்பகுதிக்குள் உரிய இருவெட்டுக்கள் பஸ் வண்டிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் வழங்கப்படும் இருவெட்டுக்களை மாத்திரமே பஸ்வண்டிகளில் ஒலி,ஒளிபரப்பமுடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க மல்லிமாராச்சி தெரிவித்தார்.