திருகோணமலை இறக்ககண்டி பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது. இறக்கண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 29 வயதான அப்துல் ஹசன் றிஸ்வான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொம்பான் குளம் பகுதியிலுள்ள கச்சான் தோட்டத்திற்கு சென்று திரும்பும் போதே யானை தாக்கியுள்ளது. இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குச்சவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.