அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கொட்டாஞ்சேனை, கிராண்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும். இதற்கு மேலதிகமாக கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அளவிலேயே நீர் விநியோகிக்கப்படுமெனவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.