சிரியாவில் ISIS கட்டுப்பாட்டிலுள்ள மற்றுமொரு பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறியுள்ளனர். சிரியா – ஈராக் எல்லைப் பகுதியிலுள்ள பக்குஷ் நகரிலிருந்தே மக்கள் வெளியேறியுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுவர்களும் இதில் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வழிகாட்டலில் செயற்படும் சிரிய ஜனநாயக படையணி பக்குஷ் நகரில் தாக்குதல்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.