மாத்தறை-கதிர்காமம் பிரதான பகுதியின் தங்காலை-மஹவெல வீதியில் ட்ரக் வண்டியொன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டியில் வருகை தந்த தாயும் அவரது மகளும் பலியானதோடு தந்தையும் மகனும் படுகாயங்களுக்குள்ளானதோடு தங்காலை வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லுணுகம்வெù தெற்கு பிரதேச 2ஆம் கொலனியை வசிப்பிடமாக கொண்ட தாயும் மகளுமே உயிரிழந்துள்ளனர்.மகளது வயது 3 ஆகும்.தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.