இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களுக்கு இதனூடாக வசதிகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீண்டகால வேலைத்திட்டமான அதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதும் திட்டத்தின் நோக்கமென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.