புனித நோண்மதி தினத்தன்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 300 மதுபான போத்தல் நுவரெலியா பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.
அக்கரபத்தனையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் குறித்த மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். நோண்மதி தினத்தன்று அதிக விலைக்கு இவை விற்பனை செய்ய தயாராக வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். நுவரெலியா பொலிஸ் நிலைய ஊழல் மோசடி ஒழிப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.