மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலக கிண்ண தொடரின் பின்னர் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை இழந்திருந்த கிறிஸ் கெய்ல் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரில் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதலாவது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற பெருமை கிறிஸ் கெய்லுக்கு உரியது. இந்நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளமை கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.