அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டுமென ஜப்பான் பரிந்துரை செய்தது. வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்தற்காக அமைதிக்கான நோபல் பரிசு ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட வேண்டுமென ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய வடகொரிய தற்போது அணுவாயுத சோதனையை கைவிட்டுள்ளது. தற்போது கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் இல்லை. இந்நிலமைக்கு பிரதான காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.