மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் வல்லிபுரம் கிராமத்தில் தாமரை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தலைவர் சிவஞானம் சவதர்ஷன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பா.உ. காதர் மஸ்தான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து
100 000 ரூபா மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு வழங்கப்பட்தோடு 75 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் வைபவ ரீதியாக வல்லிபுரம் பொது நோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.