இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட காலி பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையொன்றின் அதிபரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான மஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
இப்பாடசாலையின் முதலாம் தரததிற்கு மாணவி ஒருவரை அனுமதிப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்று கொள்ளும் போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டார். இவர் காலி பிரதான மஜிஸ்திரேட் முன்னிலை;யில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.