பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் வன பகுதியில் மரை வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன், மேலும் ஒரு சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சென் விஜயன்ஸ் பகுதியில் வேட்டையாடப்பட்ட மாமிசத்தை பொகவந்தலாவ கெம்பியன் பகுதிக்கு விற்பனை செய்வதற்காக முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் மாமிசத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் 20 கிலோ மாமிசமும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.