புதிய உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 162 வது கிராமம் இன்றைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது. 18 வீடுகளை கொண்ட குறித்த கிராமத்திற்கு சங்கவிரு சோபித்த நாஹிமி கிராமம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென குறைந்த வட்டியில் வீடுகளை கட்டுவதற்கு பயனாளர்க்கு கடன் வழங்கப்பட்டதாக வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுக்க, மாதுளுவாவே பகுதியில் கிராமம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.