கடன் அட்டை மற்றும் டெபிட் அட்டைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. க்கிரடிற் மற்றும் டெபிற் அட்டை மோசடி தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மோசடியை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ATM வலையமைப்பின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக வாடிக்கையாளர்கள் EMV தொழிநுட்பத்துடன் கூடிய அட்டைகளை பயன்படுத்த வேண்டுமென மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இலத்திரனியல் ச்சிப் பொருத்தப்பட்டவைகளாக EMV அட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் EMV அட்டைகளின் பயன்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை ATM இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.