அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் மேலும் 2 ஆயிரம் படையினரை பணியில் அமர்த்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை பெண்டகன் எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எல்லைப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு காவலரண்களுடாக கண்காணிப்பு பணிகளில் படையினர் ஈடுபடவுள்ளனர். சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் புகலிட கோரிக்கையாளர்கள் நுழைவதை தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெண்டகன் அறிவித்துள்ளது.