வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு தொடர்பில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனு மீதான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 13ம் திகதிக்கு விசாரணைக்கு எடுப்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது. சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சரான பீ. டெனீஸ்வரனினால் தாக்கல் செயயப்பட்டுள்ளது. டெனீஸ்வரனை வட மாகாண சபையின் கடற்றொழில் போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்குதவதற்கு முன்னாள் முதலமைச்சர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு தடை விதிக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.