ஒருதொகை போதைப்பொருளுடன் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இது தொடர்பான சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபர் கட்டாரிலிருந்து வருகைத்தந்துள்ளார். அவர் தனது பயணப்பையில் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்துவைத்து எடுத்துவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.