மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் தனியார் பஸ் வண்டியொன்று மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றது. இதில் மட்டக்களப்பு கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளரான 50 வயதுடைய கந்தகுட்டி கோமலேஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்களப்பு செங்கலடியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார். இவ்விபத்து அருகில் இருந்த சீசீரிவி கமராவில் பதிவாகியுள்ளது. ஏறாவூர் பொலிசார் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்வண்டியின் சாரதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.