தெமட்டகொட – காலிபுல்லே தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.