மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த 276 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக புத்தளம் பகுதியில் இதுதொடர்பான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது ஆயிரத்து 568 வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வர்த்தகர்கள் பலர் எச்சரிக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.