அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் 21 வயதான டெகோட்டா தெரியட் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து ஆயிரத்து 770 கிலோமீற்றர் தொலைவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குறித்த இளைஞனின் பெற்றோரும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை டெகோட்டாவை கைதுசெய்த சந்தர்ப்பத்தில் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியையும் லூசியானா மாநில பொலிசார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.