போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் விசேட திறன்களை வெளிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகளை கௌரவப்படுத்தும் ஜனாதிபதி விருது வழங்கும் விழா இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நிகழ்வு நடைபெறும். 2015 ஜனவரி 14ம் திகதி முதல் 2019ம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி வரை இடம்பெற்ற போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிளே விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.